செய்திகள்

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ரசிகர்களுக்கு சூர்யா & கார்த்தி நிதியுதவி

DIN

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தங்களது ரசிகர்களுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் நிதியுதவி செய்துள்ளார்கள்.

கரோனா ஊரடங்கால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் தங்களது ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு தலா ரூ. 5,000 ஆயிரம் அளித்துள்ளார்கள் சூர்யாவும் கார்த்தியும். தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 250 உறுப்பினர்களுக்குத் தலா ரூ. 5,000 அளித்துள்ளார் நடிகர் சூர்யா. அதேபோல சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தியும் தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 200 உறுப்பினர்களுக்குத் தலா ரூ. 5,000 அளித்துள்ளார். இந்தத் தொகையை ரசிகர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் செலுத்தியுள்ளார்கள். 

இதற்கு முன்பு சூர்யா குடும்பத்தினர், கரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி அளித்திருந்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT