தமிழக அரசின் கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடி வழங்கியுள்ளது லைகா நிறுவனம்.
அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.
தமிழக முதல்வரின் கரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடி வழங்கியுள்ளார் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன். முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து சுபாஸ்கரன் சார்பாக இத்தொகை வழங்கப்பட்டது.