நடிகர் விஜய் சேதுபதிக்கு டிவிட்டரில் மிரட்டல் விடுத்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது கோவை கடைவீதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 7ஆம் தேதி தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு நொக்கப்பரிசு ரூ.1001 வழங்கப்படும் என அறிவித்தார்.
இதையும் படிக்க | பொங்கல் தொகுப்பில் பரிசுப் பணம்: எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்
அர்ஜூன் சம்பத்தின் இந்தப் பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் வன்முறைத் தூண்டும் வகையில் பதிவிட்ட அர்ஜூன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன.
இதையும் படிக்க | நடிகர் சூர்யாவை தாக்குபவருக்கு பரிசு அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு
இந்நிலையில் சமூக அமைதியை குலைக்கும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் உள்ளதாகக் கூறி இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மீது கோவை கடைவீதி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.