செய்திகள்

நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல்: அர்ஜூன் சம்பத் மீது வழக்குப்பதிவு

DIN

நடிகர் விஜய் சேதுபதிக்கு  டிவிட்டரில் மிரட்டல் விடுத்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது கோவை கடைவீதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 7ஆம் தேதி தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு நொக்கப்பரிசு ரூ.1001 வழங்கப்படும் என அறிவித்தார். 

அர்ஜூன் சம்பத்தின் இந்தப் பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் வன்முறைத் தூண்டும் வகையில் பதிவிட்ட அர்ஜூன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் சமூக அமைதியை குலைக்கும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் உள்ளதாகக் கூறி இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மீது கோவை கடைவீதி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT