சூர்யா நடித்த 'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். தொடர்ந்து ' ராம்', 'பருத்தி வீரன்', 'ஆதி - பகவன் 'போன்ற படங்களை இயக்கினார். இதில் ஆதி-பகவன் தவிர்த்து மற்ற 3 படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன.
இவரது படங்கள் காலம் கடந்தும் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக 4 படங்களிலும் யுவனின் இசை படங்களின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தது. இதனையடுத்து இருவரும் மீண்டும் எப்பொழுது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
இதையும் படிக்க | சமீபத்தில் திருமணமான சின்னத்திரை ஜோடிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சிம்பு: வெளியான விடியோ
இந்த நிலையில் இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறிதத் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.