செய்திகள்

மீண்டும் இணையும் இயக்குநர் அமீர் - யுவன் வெற்றிக் கூட்டணி !

புதிய படத்தில் இயக்குநர் அமீர் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

DIN

சூர்யா நடித்த 'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். தொடர்ந்து ' ராம்', 'பருத்தி வீரன்', 'ஆதி - பகவன் 'போன்ற படங்களை இயக்கினார். இதில் ஆதி-பகவன்  தவிர்த்து மற்ற 3 படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. 

இவரது படங்கள் காலம் கடந்தும் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக 4 படங்களிலும் யுவனின் இசை படங்களின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தது. இதனையடுத்து இருவரும் மீண்டும் எப்பொழுது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்த நிலையில் இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறிதத் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும்! - டிடிவி தினகரன்

உலகக் கோப்பையை வெல்வதில் மட்டுமே கவனம், பாதுகாப்பு மீது நம்பிக்கை உள்ளது: ஆஸி. கேப்டன்

சு. வெங்கடேசன் உள்பட 8 எம்பிக்கள் இடைநீக்கம்! ராகுல் தலைமையில் போராட்டம்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!

SCROLL FOR NEXT