மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வெளியான 'பேர் வச்சாலும்' பாடல் வரிகள் உருவான விதத்தை இசையமைப்பாளர் இளையராஜா விடியோ மூலம் பகிர்ந்துள்ளார்.
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெறும் 'பேர் வச்சாலும்' பாடல் சமீபத்தில் வெளியான சந்தானத்தின் டிக்கிலோனா படத்திலும் இடம்பெற்றிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா பாடலின் ஒலியை இந்தப் படத்தில் சற்று மாற்றியிருந்தது பெரிதளவில் ஹிட் ஆனது.
இந்தப் பாடலை யூட்யூபில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக யுவன் ஷங்கர் ராஜா பேஸ்புக் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் வரிகள் உருவான விதம் குறித்தும், பாடலாசிரியர் வாலியுடனான உரையாடல் குறித்தும் இளையராஜா விவரிக்கிறார்.
விடியோ: