செய்திகள்

நாளை(செப்-30) வெளியாகிறது ‘நோ டைம் டு டை’

DIN

பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து உருவான ‘நோ டைம் டு டை’ திரைப்படம் நாளை(செப்-30) இந்தியாவில் வெளியாக இருக்கிறது.

’கேசினோ ராயல்’ ‘ஸ்பெக்டர்’ படங்களில் ஜேம்ஸ் பாண்ட் நாயகனாக நடித்த டேனியல் கிராய்க் ‘நோ டைம் டு டை’ படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் கடந்த ஆண்டே வெளியாக இருந்த நிலையில் கரோனா பாதிப்பால் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் நாளை(செப்-30) இப்படம் வெளியாகிறது.

மேலும், இது நடிகர் டேனியல் கிராய்க் நடிக்கும் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என்பதால் அவரது ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் வரும் அக்.8 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT