முகப்பு
செய்திகள்

அண்ணாத்த படத்தை வன்மத்தோடும் வக்கிரத்தோடும் விமர்சனம் செய்வதா?: பிரபல இயக்குநர் வேதனை

வன்மத்தோடும் வக்கிரத்தோடும் நாகரிகமற்றும் சிலர் விமர்சனம் செய்வது வேதனையாக இருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:32 AM
பகிர்:


ரஜினி நடித்த அண்ணாத்த படத்தை மோசமாக விமர்சனம் செய்பவர்களுக்குப் பிரபல இயக்குநர் பேரரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சன் பிக்சா்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி காந்த், நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோா் நடித்த அண்ணாத்த படம், தீபாவளி அன்று உலகெங்கிலும் வெளியானது. 

இந்நிலையில் இப்படத்தை மோசமாக விமர்சனம் செய்தவர்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் பிரபல இயக்குநர் பேரரசு. ட்விட்டரில் அவர் கூறியதாவது:

திரைப்படத்தில் நிறைகுறை இருக்கத்தான் செய்யும். அதை தேசத்துரோக அளவுக்கு வன்மத்தோடும் வக்கிரத்தோடும் நாகரிகமற்றும் சிலர் விமர்சனம் செய்வது வேதனையாக இருக்கிறது. சில யூடியூப் சேனல்களின் விமர்சனங்கள் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டன. இருந்தும் அண்ணாத்த வெற்றி அண்ணார்ந்து பார்க்க வைக்கும் என்று கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →