முகப்பு
செய்திகள்

ராமர் பாலம் குறித்த சர்ச்சைக்குரிய திரைப்படம் - கதையைக் கேட்ட சுப்பிரமணியன் சுவாமி

ராமர் பாலம் குறித்த ராம் சேது படம் தொடர்பாக நடிகர் அக்ஷய் குமாருக்கு சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:11 AM
பகிர்:

ராமர் பாலம் குறித்த ராம் சேது படம் தொடர்பாக நடிகர் அக்ஷய் குமாருக்கு சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஹிந்தியில் அக்ஷய் குமார், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ராம் சேது திரைப்படம் வருகிற 24 ஆம்  தேதி வெளியாகவுள்ளது. அபிஷேக் சர்மா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

தொல்பொருள் ஆய்வாளர்கள் ராமர் பாலம் உண்மையா இல்லையா என்பதை ஆராய்ச்சி செய்வதுதான் இந்தப் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் கதை குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளது. 

இந்தப் படத்தில் உள்ள கருத்துகள் தவறாக இருக்கின்றனவா என்று தெரிந்துகொள்ள இந்தப் படத்தை கதையைக் கேட்டு நடிகர் அக்ஷய் குமார் உள்ளிட்டோருக்கு சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.