நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்கப்போவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
‘லத்தி’ திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக நடிகர் விஷால் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
இதுதொடர்பாக பேசிய விஷால், ‘என் படங்களிலேயே பெரிய பட்ஜெட் படமாக லத்தி தயாராகியுள்ளது. படத்தின் கடைசி 40 நிமிட சண்டைக் காட்சி கண்டிப்பாக பேசப்படும். சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் இப்படத்திற்காக தேசிய விருது வாங்குவார். அடுத்ததாக நான் துப்பறிவாளன் - 2 படத்தை இயக்குகிறேன். அதன்பின், விலங்குகளை வைத்து திரைப்படம் எடுக்கும் திட்டம் உள்ளது. மேலும், நடிகர் விஜய்க்காக கதை எழுதி வருகிறேன். என் இயக்கத்தில் அவர் நடிப்பார் என்னும் நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் ஃபிலிம் சிட்டி அமைய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்போவதாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.