செய்திகள்

பாடலாசிரியரான இறையன்பு..!

DIN

தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு புதுமுகங்கள் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்திய ஆட்சிப் பணியில் பாராட்டுக்களைப் பெற்ற ஆட்சியரான வெ.இறையன்பு தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

ஆட்சிப் பணியைத் தாண்டி சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை ஆகிய பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். குறிப்பாக, இவரின் ‘உலகை உலுக்கிய வாசகங்கள்’, ‘போர் தொழில் பழகு’ போன்றவை முக்கியமான நூல்களாக கருதப்படுகின்றன.

இந்நிலையில், ஓம் ஜெயம் தியேட்டர் தயாரிப்பில் ரிஷி, சிங்கமுத்து உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் ‘பியூட்டி’ என்கிற திரைப்படத்திற்கு இறையன்பு 2 பாடல்களை எழுதியுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT