செய்திகள்

நயன்தாராவின் புகைப்படத்தைப் பகிர்ந்து விக்னேஷ் சிவன் வருத்தம்: காரணம் இதுதான்

நயன்தாராவின் பயணம் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.  

DIN

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் நீண்ட வருடங்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது தி ரௌடி பிக்சர்ஸ் சார்பாக இருவரும் தொடர்ச்சியாக படங்களை தயாரித்து வருகிறார்கள். 

சமீபத்தில் இருவரும் இணைந்து வெளியிட்ட ராக்கி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேப் போல ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தையும் இவர்களே வாங்கி விருதுகளுக்கு அனுப்பி வருகின்றனர். 

மேலும், நயன்தாரா நடிக்கும் கனெக்ட், கவின் நடிக்கும் ஊர் குருவி போன்ற படங்களை இருவரும் ரௌடி பிக்சர்ஸ் சார்பாக தயாரித்து வருகிறார்கள்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது. அனிருத் இசையில் நான் பிழை, டுடுடு போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் புகைப்படம் பகிர்ந்து, பணிகளை விரைவில் முடித்து நீண்ட விடுமுறைக்காக காத்திருக்கிறேன். இவருடன் பயணம் செல்வது ஆவலுடன் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதில் பே(bae) என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.அனிருத் இசையில் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் விக்னேஷ் சிவன் எழுதிய பே பாடல் ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT