முகப்பு
செய்திகள்

பாரதி கண்ணம்மா தொடரில் புதிய அஞ்சலியாக நடிக்கப்போவது இவரா ?

பாரதி கண்ணம்மா தொடரில் புதிய அஞ்சலியாக நடிக்கவிருக்கும் நடிகை குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:20 AM
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் பல்வேறு மாற்றங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷ்னி இந்தத் தொடரிலிருந்து விலகி அதிர்ச்சி அளித்தார். ரோஷ்னி தற்போது குக் வித் கோமாளி சீசன் 3யில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். 

பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலியாக கலக்கியவர் கண்மணி மனோகரன். இவர் திடீரென்று தொடரிலிருந்து விலகினார். ஜி தமிழ் தொலைக்காட்சியின் புதிய தொடரில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா தொடரில் புதிய அஞ்சலியாக அருள் ஜோதி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அருள் ஜோதி தனது நடிப்பின் பாரதி கண்ணம்மா தொடருக்கு கூடுதல் பலம் சேர்ப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.