செய்திகள்

மீறினால் கடும் நடவடிக்கை: ரசிகர்களை எச்சரித்த இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் படக்குழு

DIN

இயக்குநர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் ரசிகர்களுக்கு எச்சரிக்கைவிடுக்கும் விதமாக பதிவு ஒன்றை எழுதியுள்ளது. அதில், ''இயக்குநர் ஷங்கர் - ராம்சரண் இணையும் படத்தின் தேவைக்காக திறந்த வெளியில் மக்கள் கூட்டத்துடன் படபிடிப்பு நடைபெறவிருக்கிறது. 

இதனால் ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். படப்பிடிப்புத் தளத்தில் அனுமதியின்றி எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களைப் பதிவிடக் கூடாது. அப்படி பதிவிட்டால் எங்கள் குழு நடவடிக்கை எடுக்கும். 

அதனால் அனைவரும் எங்களுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் அப்படி ஏதாவது பதிவுகளைப் பார்த்தால் உடனடியாக report@blockxtech.com என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.   

இயக்குநர் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT