செய்திகள்

பிர்ஜு மகாராஜ் மறைவிற்கு கமல் இரங்கல்: 'உன்னை காணாது நான் இன்று நானில்லையே'

DIN

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

முன்னதாக பிர்ஜுவிற்கு மத்திய அரசு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் வழங்கி கௌரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் வரும் உன்னை காணாத என்ற கதக் நடனப் பாடலை பிர்ஜு தான் வடிவமைத்திருந்தார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் பிர்ஜு மகாராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், ''ஈடு இணையற்ற நடனக கலைஞரான பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைந்தார். ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும், விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம். இசைக்கும், நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, உன்னை காணாது நான் இன்று நானில்லையே'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT