டிஆர் 'மீண்டு'ம் வரார் - வைரலாகும் புகைப்படங்கள்
அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த டி.ஆர் முற்றிலும் குணமான நிலையில் நாளை சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த டி.ஆர் முற்றிலும் குணமான நிலையில் நாளை சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர், உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அவரது மகன்கள் சிம்பு மற்றும் குறளரசன் ஆகியோர் அவரை உடனிருந்து கவனித்துக்கொண்டனர்.
பிரபல நடிகருடன் திருமணமா? என்ன சொல்கிறார் நித்யா மேனன் ?
Advertisement
Advertisement
சிகிச்சைக்கு பிறகு முற்றிலும் குணமான டி.ஆர், அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வில் இருப்பார் என கூறப்பட்டது. இதனையடுத்து தந்தை குணமானதால் சென்னை திரும்பிய நடிகர் சிம்பு படப்பிடிப்புகளில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் ஓய்வுக்கு பிறகு நாளை(ஜூலை 22) அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார். இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் டி.ஆர். அவரது மனைவி, மகன் குறளரசன் ஆகியோர் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.