துபை எக்ஸ்போவில் இளையராஜா உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தியதற்கு ரஹ்மானே காரணம் என யுவன் தெரிவித்தார்.
துபை எக்ஸ்போ நிகழ்ச்சியில் இளையராஜா, ரஹ்மான், யுவன் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவிற்கு இளையராஜா சென்றார். இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் துபை எக்ஸ்போ நிகழ்ச்சி பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நாங்கள் அங்கே இசை நிகழ்ச்சி நடத்தியதற்கு காரணம் ஏ.ஆர்.ரஹ்மான்தான். என் ஊரில் இருக்கும் இசைக் கலைஞர்கள் வந்து இசை நிகழ்ச்சி நடத்த நீங்கள் ஒத்துக்கொண்டால் நான் வந்து இசை நிகழ்ச்சி நடத்துகிறேன் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ரஹ்மான் சொன்னார்.
மேலும் நீங்கள் ஷகிரா போன்ற இசைக் கலைஞர்களை அழைத்து வருகிறீர்கள். எங்கள் ஊரிலும் சிறந்த இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். என் அப்பா (இளையராஜா) பெயர், என் பெயரை, அனிருத் பெயரை ரஹ்மான்தான் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு எக்ஸ்போ சென்று இசை நிகழ்ச்சி நடத்தினோம் என்றார்.