செய்திகள்

'''சந்திரேலகா' தொடரிலிருந்து நான் விலகுகிறேன், காரணம்...'': முக்கிய பிரபலம் விலகல்

DIN

வாணி ராணி தொடர் மூலம் பிரபலமானவர் அருண் ராஜன். தற்போது சந்திரலேகா என்ற தொடரில் நடித்து சபரி என்ற வேடத்தில் நடித்து வந்தார். இந்தத் தொடர் 2014 ஆம் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிறது. 

தொடர்ந்து 8 ஆண்டுகளாக சபரி என்ற வேடத்தில் அருண் ராஜன்தான் நடித்து வருகிறார். தற்சமயம் இவருக்கு பதில் இவர் என சின்னத்திரை தொடர்களில் நடிகர்கள் மாறிக்கொண்டிருக்க 8 ஆண்டுகளாக ஒரே தொடரில் நடித்து வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் அவர் சந்திரலேகா தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் சந்திரலேகா தொடரில் இனி தொடரப்போவதில்லை. 

எனது தனிப்பட்ட பணிகள் காரணமாக என்னால் சந்திரலேகா படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. அஸ்வின் குமார் எனது வேடத்தில் நடிக்கவிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளியுங்கள் என தெரிவித்துள்ளார். 

அருண் ராஜனுக்கு பதிலாக சந்திரலேகா தொடரில் நடிக்கவிருக்கும் அஸ்வின் குமார், தற்போது சித்தி 2 தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT