காதலர்கள் இணையர்கள் இதையெல்லாம் செய்யக்கூடாது என பிரபல நடிகை கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழில் கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் பல சர்ச்சையான கருத்துக்களை கூறி வருபவர்.
இந்நிலையில், ராதிகா ஆப்தே ‘காதலர்கள் மற்றும் மணவாழ்வில் உள்ள இணையர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளை மூன்றாவது நபரிடம் கொண்டு செல்லக் கூடாது. அவர்களை நாடினால் பிரச்னை அதிகரித்து உறவில் மேலும் விரிசல் விலக்கூடும்.’ என அறிவுரை வழங்கியுள்ளார்.
இதை இணையத்தில் சிலர் வரவேற்றுள்ளனர்.