முகப்பு
செய்திகள்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி?

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:47 AM
பகிர்:

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.

இதுவரை இப்படம் ரூ.20 கோடி வரை வசூலித்துள்ளதால்  திரைப்படத்தின் திரையரங்க எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் மட்டுமல்லாது சிங்கபூரிலும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில், லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.