முகப்பு
செய்திகள்

தமிழ் திரைப்படங்களை வெளியிடுவதில் பெரிய அரசியல்: நடிகர் விஷ்ணு விஷால்

தமிழ் படங்களை சில மொழி நிறுவனங்கள் வெளியிடுவதில் சில நெருக்கடிகளை கொடுப்பதுக்கு பின்னால் பெரிய அரசியல் இருக்கலாம் என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:55 AM
பகிர்:

தமிழ் படங்களை சில மொழி நிறுவனங்கள் வெளியிடுவதில் சில நெருக்கடிகளை கொடுப்பதற்கு பின்னால் பெரிய அரசியல் இருக்கலாம் என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள கட்டா குஷ்தி திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படம் தொடர்பாக அப்படக்குழுவினர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஷ்ணு விஷால் கணவன் மனைவிக்கு இடையே எழும் கருத்துவேறுபாடுகள் தொடர்பாக இந்த படத்தில் பேசப்பட்டிருக்கும் எனவும்,தென்னிந்திய படங்கள் தற்போது பாலிவுட் படங்களை விட அதிக அளவில் இந்திய அளவில் பேசப்படுகின்றன எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் ரெட் ஜெயண்ட் நிறுவனம் அனைத்து திரைப்படங்களையும் கட்டாயப்படுத்தி வாங்கி வெளியிடுகிறார்கள் என்பதில் உண்மையில்லை எனவும் தமிழ் படங்களை சில மொழி நிறுவனங்கள் வெளியிடுவதில் சில நெருக்கடிகளை கொடுப்பதற்கு பின்னால் பெரிய அரசியல் இருக்கலாம் என கருதுவதாகவும் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.