திரிஷ்யம் மூன்றாம் பாகத்திற்கான கிளைமேக்ஸ் காட்சிகள் தயாராகிவிட்டதாக இயக்குநர் ஜித்து ஜோசப் தெரிவித்துள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘திரிஷ்யம்’ , ‘திரிஷ்யம் 2’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த படம் தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, ஹிந்தி, சீன மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.
இதையும் படிக்க | தெலுங்கு ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
இந்நிலையில், திரிஷ்யம் 3-ஆம் பாகத்திற்கான கிளைமேக்ஸ் காட்சிகள் தயாராகிவிட்டதாகவும், விரைவில் படமாக்கப்படும் என்றும் படத்தின் இயக்குநர் ஜித்து ஜோசப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி, திரிஷ்யம் 3 உருவாகும் எனத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இயக்குநர் உறுதி செய்துள்ளார்.
முதல் இரண்டு பாகங்களில், தனது மகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் காவல்துறை அதிகாரியின் மகனை அடித்துக் கொன்றுவிட்டு அந்த குற்றத்தை மறைத்திருந்த நிலையில், மூன்றாம் பாகத்தில் கிளைமேக்ஸ் காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.