மும்பை: நடிகை ஜெனிலியா டிசோசா சமீபத்தில் தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தசரா பண்டிகையை கொண்டாடியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
தானும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் இதன் வயிலாக வலியுறுத்தியுள்ளார்.
இதன் அடிப்படையில், 'துஜே மேரி கசம்' நாயகி டிசோசா தெரிவித்தாவது:
எங்கள் குடும்பத்தில் தசரா ஒரு முக்கியமான பண்டிகை. இந்த நாளில் நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். தசரா என்பது வெற்றியுடன் மட்டுமே முடிவடையும் ஒரு குறியீடாக நான் உணர்கிறேன் என்றார்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட ஜெனிலியா, இந்த தசராவில் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான உலகம் அமையவும், அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.