முகப்பு
செய்திகள்

வசூலில் முதலிடத்தைப் பிடித்த 'பொன்னியின் செல்வன்'

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் தமிழக அளவில் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:35 AM
பகிர்:

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் வசூல் சாதனை படைத்துவருகிறது. இதுவரை ரூ.400 கோடிக்கும் வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் அதிக வசூலித்த தமிழ் படங்களின் வரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

இரண்டாவது இடத்தில் கமல்ஹாசனின் விக்ரம், 3வது இடத்தில் பாகுபலி 2, 4வது இடத்தில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம், 5வது இடத்தில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கானபணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. முதல் பாகத்தின் போதே படத்தின் பட்ஜெட்டை விட கூடுதலாக வசூலித்துவிட்டதால் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டின்போது கிடைப்பதெல்லாம் லாபம் தான் என்று கூறப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →