செய்திகள்

’இனி இப்படி பேசினால் செருப்பால் அடிப்பேன்...’: பிரபல நடிகர் ஆவேசம்

DIN

பாஜகவையும் தன்னையும் இணைத்துப் பேசினால் செருப்பால் அடிப்பேன் என பிரபல நடிகர் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

தெலுங்கில் பிரபல நடிகரான பவன் கல்யாண் ஆந்திரத்தில் பாஜவின் ‘பி’ டீமாக செயல்பட ஜனசேனா கட்சியை தொடங்கியதாகவும் பாஜவிடம் பணம் வாங்கி தனது கட்சியை நடத்தி வருவதாகவும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் தன் கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடையே  நடிகர் பவன் கல்யாண் பேசுகையில், ‘நான் பாஜவிடம் பணம் பெற்றுக்கொண்டு ’பி’ டீமாக உள்ளேன் எனக்கூறுவதை ஏற்க முடியாது. இனி இதுபோல் பேசினால் செருப்பால் அடிப்பேன்’ எனக்கூறியபடி தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி மேடையில் காட்டினார். 

மேலும், முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை அவசரமாக சந்தித்து நீண்ட நேரம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டார்.

இதனால், ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT