செய்திகள்

விஜய் டிவி தொடரைப் பார்த்து நடிகையை வியந்து பாராட்டிய அனுஷ்கா - சுவாரசியத் தகவல்

DIN

விஜய் டிவி தொடரைப் பார்த்த நடிகை அனுஷ்கா அந்தத் தொடரின் நாயகியை அழைத்து பாராட்டியுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருபவர் அனுஷ்கா. குறிப்பாக பாகுபலி படத்தில் தேவசேனையாக கலக்கினார். பாகுபலி மூலம் அவருக்கு இந்திய அளவில் புகழ் வெளிச்சம் கிடைத்தது. 

கமர்ஷியல் படங்களில் நாயகர்களுடன் பாடல்களுக்கு மட்டும் நடனமாடி செல்வது மட்டுமல்லாமல் தனி கதாநாயகியாகவும் கலக்கினார். குறிப்பாக அருந்ததி, ருத்ரமாதேவி, பஞ்சமுகி போன்ற படங்களில் அவரது நடிப்பை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

கடைசியாக அனுஷ்கா நடிப்பில் நிசப்தம் திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னைத் தொடும் தொடரின் நாயகி பவித்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுஷ்கா குறித்து பதிவிட்டுள்ளார். 

அதில், எனக்கு நடிகை அனுஷ்காவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இது உண்மையா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. தென்றல் வந்து என்னைத் தொடும் தொடரில் என் நடிப்பை அவர் பாராட்டினார். மேலும் இந்தத் தொடரை அவர் தொடர்ந்து பார்ப்பதாகவும் தெரிவித்தார். மிகவும் அயர்ச்சியாக இருந்த தருணத்தில் அனுஷ்கா அழைத்து பேசியது புத்துணர்வை அளித்தது என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT