முகப்பு
செய்திகள்

ஹிந்தி இயக்குநருடன் கைகோர்க்கும் சுந்தர்.சி

இயக்குநர் சுந்தர்.சி தனது அடுத்த படத்துக்காக ஹிந்தி பட இயக்குநருடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:39 AM
பகிர்:

இயக்குநர் சுந்தர்.சி தனது அடுத்த படத்துக்காக ஹிந்தி பட இயக்குநருடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சுந்தர்.சி தற்போது ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள காஃபி வித் காதல் படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

மேலும் பட்டாம்பூச்சி என்ற படத்தில் நடித்துள்ள சுந்தர்.சி அடுத்ததாக வி.இசட்.துரை இயக்கத்தில் தலைநகரம் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில் சுந்தர்.சி அடுத்ததாக நடிக்கும் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பரமபதம் விளையாட்டு பட இயக்குநர் திருஞானம் இயக்கும் இப்படத்தில் படத்தில் சுந்தர்.சி நடிக்கிறார். அவருடன் ஹிந்தி பட இயக்குநர் அனுராக் காஷ்யமும் இணைந்து நடிக்கவுள்ளார். ராகினி திவேதி கதாநாயகியாக நடிக்கிறார். 24 ஹவர்ஸ் புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்த இமைக்கா நொடிகள் பெரிய வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.