சமந்தாவை புகழ்ந்த கீர்த்தி சுரேஷ்!
நடிகை சமந்தாவை கீர்த்தி சுரேஷ் புகழ்ந்து கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது, தமிழைக் காட்டிலும் தெலுங்கு படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவரது தசரா திரைப்படம் பான் இந்திய படமாக வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பின்னர் அதிலிருந்து மீண்டு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பான் இந்திய படமாக ரிலீஸான சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படம் ரூ. 50-60 கோடி வசூலானதாக தகவல் வெளியானது. மேலும் இவரது சாகுந்தலம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பக்கத்தில் ரசிகர்கள் சமந்தாவைப் பற்றி கேள்வி கேட்டபோது, “நான் மிகவும் மதிக்கும் ஒரு ஆளுமை சமந்தா. நான் பார்த்ததிலேயே மிகவும் பலமான இதயத்தை கொண்டவர். அவரை யாரும் தடுக்க முடியாது” என பதிவிட்டிருந்தார். இதனைப் பகிர்ந்த சமந்தா, "நன்றி டார்லிங்" என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.