'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிஜூ தீவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிகழ்காலம் கலந்து வரலாற்று பின்னணியில் 3டி தொழில் நுட்பத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை 10 மொழிகளில் இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுதான் சூர்யாவின் அதிகபட்ச பட்ஜெட் படமென்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது படத்தின் தலைப்பு ‘கங்குவா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படக்குழு வெளியிடும் முன்பே சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.