செய்திகள்

இணையத்தில் வைரலாகும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண அழைப்பிதழ்!

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக வந்த தகவலைத் தொடர்ந்து இவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக வந்த தகவலைத் தொடர்ந்து இவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்படுவர் அசோக் செல்வன். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

இவருக்கும், நடிகர் அருண் பாண்டியனின் மூன்றாவது மகளான நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் அடுத்த மாதம் திருநெல்வேலியில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அழைப்பிதழில், செப்டம்பர் 13 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் இட்டேரியில் உள்ள சேது அம்மாள் பண்ணை இல்லத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், திருமணம் முடிந்ததும் அனைவருக்கும் பசுமை விருந்து கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூன்றாவது வரிசையில் ராகுல் காந்தி! மீண்டும் அவமதிப்பா?

கிருஷ்ணகிரியில் குடியரசு நாள் விழா

காஞ்சிபுரத்தில் குடியரசு நாள் விழா கொண்டாட்டம்!

ராணிப்பேட்டையில் குடியரசு நாள் விழா கொண்டாட்டம்

குடியரசு நாள்: புதுக்கோட்டையில் ஆட்சியர் அருணா கொடியேற்றினார்!

SCROLL FOR NEXT