முகப்பு
செய்திகள்

ரித்திகா விலகல்: பாக்கியலட்சுமி கோபி கூறிய தகவல்?

பாக்கியலட்சுமி தொடரிலிருந்து ரித்திகா விலகியதாக தகவல் வெளியான நிலையில், இத்தொடரில் நடித்துவரும் சதிஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:53 AM
பகிர்:

பாக்கியலட்சுமி தொடரிலிருந்து ரித்திகா விலகியதாக தகவல் வெளியான நிலையில், இத்தொடரில் நடித்துவரும் சதிஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முக்கியப் பதிவை வெளியிட்டுள்ளார்.

ரித்திகா நடித்துவந்த கதாபாத்திரத்தில் அக்‌ஷிதா அசோக் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, அக்‌ஷிதா காற்றுக்கென்ன வேலி தொடரில் அபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ரித்திகா தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்துவரும் சதிஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எங்கிருந்தாலும் வாழ்க" எனப் பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள ரித்திகா, "உங்களைப் போன்ற ஒரு சிறந்த நடிகருடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது." எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: விஜய் - 68 அரசியல் படமா?

இதிலிருந்து, ரித்திகா பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகியுள்ளது உறுதியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.