திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.
விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இதையும் படிக்க | கேப்டன் மில்லர் இசை வெளியீட்டுத் தேதி இதுதானா?
இதனைத் தொடர்ந்து, அருள்நிதி - பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமாண்டி காலனி 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. சமீபத்தில் இதன் மேக்கிங் விடியோ வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் டிச.16 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.