அரண்மனை போல் பிரம்மாண்ட வீடு: பெற்றோருக்கு பரிசளித்த தனுஷ்!
அரண்மனையை போல் பிரம்மாண்ட வீட்டைக் கட்டி தனது பெற்றோருக்கு பரிசளித்துள்ளார் நடிகர் தனுஷ்.
செய்திகள்அரண்மனை போல் பிரம்மாண்ட வீடு: பெற்றோருக்கு பரிசளித்த தனுஷ்!
அரண்மனையை போல் பிரம்மாண்ட வீட்டைக் கட்டி தனது பெற்றோருக்கு பரிசளித்துள்ளார் நடிகர் தனுஷ்.
அரண்மனையை போல் பிரம்மாண்ட வீட்டைக் கட்டி தனது பெற்றோருக்கு பரிசளித்துள்ளார் நடிகர் தனுஷ்.
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வாத்தி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
மேலும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, சென்னை போயஸ் கார்டனில் இடம் வாங்கிய நடிகர் தனுஷ் கடந்த 2021ஆம் ஆண்டு வீடு கட்ட அடிக்கல் நாட்டினார். இந்த வீட்டின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து சமீபத்தில் புதுமனை புகுவிழாவும் நடைபெற்றது.
சுமார் ரூ. 150 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் தனது பெற்றோர்களுடன் சமீபத்தில் தனுஷ் குடிபெயர்ந்தார்.
இந்நிலையில், இயக்குநரும் தனுஷ் ரசிகர் மன்ற தலைவருமான சுப்ரமணியன் சிவா, தனுஷ் வீட்டில் எடுத்த புகைப்படத்தை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக தொடங்கியுள்ளது.
புதிதாக தனுஷ் கட்டியுள்ள வீட்டின் அருகில்தான் முன்னாள் மாமனாரும், சூப்பர் ஸ்டாருமான நடிகர் ரஜினியின் வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.