செய்திகள்

மெளன ராகம் நடிகையின் புதிய தொடர்.. இதயம்! எந்த டிவியில் தெரியுமா?

DIN

மெளன ராகம் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஜனனி அசோக் குமார் நடிப்பில் புதிய தொடர் உருவாகவுள்ளது. 

இதயம் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தத் தொடர் எந்தத் தொலைக்காட்சியில் வெளியாகும் என ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது. 

இதற்கு பதிலளிக்கும் விதத்தில் தற்போது முக்கிய அறிவிப்பை இதயம் குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இதயம் தொடரின் பூஜை இன்று (ஜூலை 12) சென்னையில் நடைபெற்றது. ராஜம்மாள் கிரியேஷன் தயாரிப்பில் உருவாகவுள்ள இதயம் தொடரை ராஜ் குமார் இயக்குகிறார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான திருமதி ஹிட்லர் தொடரை இயக்கியவர். 

இதயம் தொடரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனனி அசோக் குமார் பல தொடர்களில் துணை கதாபாத்திரமாக நடித்தவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். 

அதனைத் தொடர்ந்து ஜீ தமிழின் செம்பருத்தி, விஜய் தொலைக்காட்சியின் மெளன ராகம் -1, மெளன ராகம் -2, நாம் இருவர் நமக்கு இருவர், ஆயுத எழுத்து, காற்றுக்கென்ன வேலி போன்ற தொடர்களில் நடித்துள்ளார். 

பல தொடர்களில் துணை பாத்திரமாக நடித்து வந்த ஜனனி, முதல்முறையாக இதயம் தொடரின் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். பல நாள் கனவு நனவாகியுள்ளதாக ரசிகர்கள் ஜனனிக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT