செய்திகள்

பெண் நட்பின் மீது நம்பிக்கை கொடுத்தவள்: எதிர்நீச்சல் ஆதிரை உருக்கம்!

DIN

பெண் நட்பின் மீது நம்பிக்கை ஏற்பட்டதற்கு மிக முக்கிய காரணம் நடிகை ஹரிபிரியா இசை என நடிகை சத்யா தேவராஜன் தெரிவித்துள்ளார்.  

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் எதிர்நீச்சல் தொடர் ஓளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடிகை சத்யா தேவராஜன் நடித்து வருகிறார். இதேபோன்று நந்தினி பாத்திரத்தில் நடிகை ஹரிபிரியா இசை நடித்து வருகிறார். 

மூன்று மருமகள்களை மையமாக வைத்து எதிர்நீச்சல் தொடர் எடுக்கப்படடு வருகிறது. இதில் இரண்டாவது மருமகளாக வருபவர் நந்தினி. 

எதிர்நீச்சல் தொடரில் நந்தினி பாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பெரும் ஆணாதிக்கம் கொண்டவராக வரும் ஆதி குணசேகரனை நேருக்கு நேர் நின்று எதிர்த்து பேசும் நந்தினியின் காட்சிகள், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவை.

ஆதி குணசேகரனின் தங்கை பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சத்யா தேவராஜன் (ஆதிரை). கரிகாலன் உடனான ஆதிரையின் காட்சிகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

இந்நிலையில் எதிர்நீச்சல் தொடரில் ஹரிபிரியாவும், சத்யாவும் நெருக்கமாகியுள்ளனர். அவர்களின் குறும்புத்தன விடியோக்களை சமூகவலைதளத்தில் அவ்வபோது பகிர்ந்து வருவது வழக்கம். 

அந்தவகையில்,  நடிகை ஹரிபிரியாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை சத்யா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பெண்கள் நட்பின் மீது மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்தியதற்கு நன்றி. அன்பு சகோதரியாக இருப்பதற்கும் நன்றி. தோழியாகவும் என் நலம் விரும்பியாகவும் நீ இருக்கிறாய். உனக்கான நான் என்றுமே இருப்பேன் என்பதை மறந்துவிடாதே! படப்பிடிப்பு இல்லையென்றாலும் உன்னுடன் இதுபோன்ற நெருக்கத்துடன் எப்போதுமே இருக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். 

ஹரிபிரியா - சத்யாவின் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

30 ஆண்டுகளுக்கு முன் இறந்த குழந்தைக்கு மணமகன் தேடும் விளம்பரம்!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT