முகப்பு
செய்திகள்

கங்குவா படப்பிடிப்பில் விபத்து: உயிர் தப்பிய சூர்யா!

கங்குவா படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் நூலிழையில் நடிகர் சூர்யா உயிர்தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:24 AM
பகிர்:

கங்குவா படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் நூலிழையில் நடிகர் சூர்யா உயிர்தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கும் 'கங்குவா' படத்தில் சூர்யா நடித்து வருகிறார். மும்பை, கொடைக்கானல், ஹைதராபாத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நடந்து முடிந்தன.

தற்போது சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி ஃபிலிம் சிட்டியின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன.

சூர்யாவின் சண்டைக் காட்சிகள் இன்று காலை படமாக்கப்பட்ட போது, 10 அடி உயரத்தில் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ரோப் கேமிரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சூர்யா நூலிழையில் உயிர்தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க | 38 மொழிகளில் கங்குவா!

மேலும், சூர்யாவின் தோல்பட்டையில் லேசாக கேமிரா மோதியதாகவும், படப்பிடிப்பு இன்று ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து இரண்டு பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →