செய்திகள்

தனக்குத்தானே தாலி கட்டிக்கொண்ட சீரியல் நடிகை!

DIN


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடரில் நடிக்கும் நாயகி தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்தவகையில் முத்தழகு தொடர் இல்லத்தர்சிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. 

திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3.30 மணிக்கு முத்தழகு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. நாள்தோறும் உணவுக்கே உழைத்து கஷ்டப்படும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண், தலைமுறை தலைமுறையாக செல்வந்தனாக இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த நாயகனை திருமணம் செய்துகொள்கிறார். அவர்கள் வாழ்க்கை எப்படி நகர்கிறது என்பதே முத்தழகு கதை.

இந்தத் தொடரில் திருமண காட்சியொன்றில், நாயகன் தாலி கட்டுவதற்கு முன்பு, நாயகி தானாக தாலிக்கு முடிச்சிட்டு கழுத்தில் மாட்டிக்கொள்ளும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

முத்தழகு நாயகி ஷபானா

டிக்-டாக் மூலம் பிரலமான ஷோபனா முத்தழகு தொடரில் நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆஷிஷ் சக்ரவர்த்தி நடிக்கிறார். அவர்களுடன் லஷ்மி வாசுதேவன், ஷாலினி ராஜன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புரோமோவில் கெட்ட வார்த்தை.. சர்ச்சையில் சந்தானம்!

சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

செலவுகளை அதிகரித்துள்ளதா யுபிஐ? ஆய்வு சொல்வது இதுதான்!

வங்கதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றி!

சென்னையிலிருந்து வேளாங்கண்ணி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் - முன்பதிவு தொடக்கம்

SCROLL FOR NEXT