முகப்பு
செய்திகள்

‘வெயிலில் மகன்கள் ஒளிர்வதை...’- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!  

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களின் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:36 AM
பகிர்:

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் இருவருக்கும்  2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக கடந்தாண்டு அறிவித்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களுடன் இருவருமே அடிக்கடி சந்திப்பதுண்டு. 

தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரை வைத்து ‘லால் சலாம்’ படத்தினை இயக்கி வருகிறார். இதில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். 

இந்நிலையில், ஐஸ்வர்யாவின் மகன்கள் விளையாட்டில் பதக்கம் வெல்வதை தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.இதில் அவர் கூறியதாவது:

எவ்வளவு கடுமையான சூரிய ஒளியினாலும் இந்த பிள்ளைகளின் விளையாட்டு ஆர்வத்தை நிறுத்த முடியாது. காலை வெயிலில் ஓடி களைத்துப் போய்விட்டனர். வெயிலில் அவர்கள் குளிப்பதையும் ஒளிர்வதையும் பார்க்க முடிந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.