முகப்பு
செய்திகள்

மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!

மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 24 ஏப்ரல் 2024, 1:31 pm IST
பகிர்:


கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் கேரளம், தமிழகம் என வசூலில் சக்கைபோடு போட்டது.

உலகளவில் ரூ.235 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய இப்படம், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு ரூ.15 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்.

மேலும், இப்படம் வருகிற மே 3 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

Advertisement

Advertisement

இதற்கிடையே, மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்களான நடிகர் சௌபின் சாகிர், பாபு சாகிர், ஷான் ஆண்டனி ஆகியோர் மீது சிராஜ் என்பவர் பண மோசடி புகார் அளித்திருந்தார்.

அதில், மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் படத்தின் லாபத்தில் 40% தருவதாகக் கூறி ரூ.7 கோடியை என்னிடமிருந்து பெற்றார்கள். ஆனால், இதுவரை பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாகக் கூறியிருந்தார்.

நடிகர் சௌபின் சாகிருடன் அவரின் தந்தை பாபு சாகிர் (வலமிருந்து இடம்)

தற்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து, காவல்துறை அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments