முகப்பு
செய்திகள்

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

அன்பே வா தொடர் நிறைவடைந்தது.

Updated On : 28 ஏப்ரல், 2024 at 7:35 AM
பகிர்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அன்பே வா தொடர் இன்றுடன்(ஏப். 28) நிறைவு பெற்றுள்ளது.

அன்பே வா தொடர் முடிவடையவுள்ளதாக கடந்த இரு மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியான நிலையில், இன்றுடன் நிறைவடைந்தது.

இந்தத் தொடரில் டெல்னா டேவிஸ் நாயகியாகவும், விராட் நாயகனாகவும் நடித்து வந்தனர். தற்போது நாயகியாக டெல்னா டேவிஸ் மாற்றாக ஸ்ரீ கோபிகா நடித்து வருகிறார்.

நவம்பர் 2020 முதல் இந்தத் தொடர் 1000 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருவதால், தொடரை விரைவில் முடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவி வந்தது.

அதேபோல், டிஆர்பியிலும் சற்று பின்தங்கியே இருந்த காரணத்தாலும் அன்பே வா தொடர் தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இத்தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் இன்று ஒளிபரப்பப்பட்டது.

இத்தொடரின் நாயகன் விராட்டுக்கு திரைத்துறையை சேர்ந்த நவீனாவுடன் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.