21 மணிநேர உழைப்பு... தீவிர படப்பிடிப்பில் அஜித்!
நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகராக இருந்தாலும் அஜித்குமார் தனி வாழ்க்கையின் மீதும் மிகுந்த கவனத்துடன் இருப்பவர். படப்பிடிப்பு, படத்தின் வெளியீடு என ஒருபக்கம் தன் உழைப்பைக் கொடுத்தாலும் மறுபுறம் குடும்பம், பயணம் என சர்ச்சைகளுக்கு இடமளிக்காமல் வாழ்ந்து வருகிறார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களிலும் தீவிரமாக நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் ஹைதராபாத்தில் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனால், நாள் ஒன்றுக்கு 21 மணி நேரங்கள் அஜித் படப்பிடிப்பிலேயே இருக்கிறாராம். மேலும், குட் பேட் அக்லி படப்பிடிப்பு இந்தாண்டு டிசம்பரில் முடியும் என்றும் அதன்பிறகு 2025, மே மாதம் வரை அஜித் ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.