செய்திகள்

21 மணிநேர உழைப்பு... தீவிர படப்பிடிப்பில் அஜித்!

DIN

நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடிகராக இருந்தாலும் அஜித்குமார் தனி வாழ்க்கையின் மீதும் மிகுந்த கவனத்துடன் இருப்பவர். படப்பிடிப்பு, படத்தின் வெளியீடு என ஒருபக்கம் தன் உழைப்பைக் கொடுத்தாலும் மறுபுறம் குடும்பம், பயணம் என சர்ச்சைகளுக்கு இடமளிக்காமல் வாழ்ந்து வருகிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களிலும் தீவிரமாக நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் ஹைதராபாத்தில் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனால், நாள் ஒன்றுக்கு 21 மணி நேரங்கள் அஜித் படப்பிடிப்பிலேயே இருக்கிறாராம். மேலும், குட் பேட் அக்லி படப்பிடிப்பு இந்தாண்டு டிசம்பரில் முடியும் என்றும் அதன்பிறகு 2025, மே மாதம் வரை அஜித் ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

SCROLL FOR NEXT