முகப்பு
செய்திகள்

அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சிவராஜ்குமார்!

கன்னட நடிகர் சிவராஜ்குமார் அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

Updated On : 20 டிசம்பர் 2024, 1:15 pm IST
நடிகர் சிவராஜ்குமார் - படங்கள்: எக்ஸ்
பகிர்:

கன்னட நடிகர் சிவராஜ்குமார் அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். டிச.24ஆம் தேதி புளோரிடாவில் உள்ள மியாமி புற்றுநோய் கழகத்தில் அறுவைச் சிகிச்சை நடைபெறவிருக்கிறது.

கன்னட சினிமாவில் நட்சத்திர நடிகராக இருப்பவர் நடிகர் சிவராஜ்குமார். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனும் புனித் ராஜ்குமாரின் சகோதரருமான இவர், கன்னட மக்களிடம் மிகுதியான மதிப்புடன் இருக்கிறார்.

ஜெயிலர் திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டும் நடித்த சிவராஜ்குமார் தமிழ் ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றார். இதனால், தமிழில் வாய்ப்புகள் அவரை நோக்கிச் சென்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அமெரிக்கா செல்வதற்காக சிவராஜ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

நம்பிக்கையுடன் இருக்கிறேன்

விமான நிலையத்துக்கு செல்வதற்கு முன்பு சிவராஜ்குமார் பேசியதாவது:

இந்தச் செய்தியை ஊடகங்கள் பெரிதுபடுத்தாததுக்கு மிக்க நன்றி. நடிகர்கள், ரசிகர்களிடமிருந்து எனக்கு வாழ்த்துகள் வந்ததுக்கு எனக்கு மகிழ்ச்சி.

பரிசோதனையில் முக்கியமான காரணிகள் எல்லாம் நல்ல விதமாகவே இருக்கின்றன. திடீரென அறுவைச் சிகிச்சைக்காக செல்வது வீட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும். எனது குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்களை பார்க்கும்போது எனக்குமே சிறிது உணர்ச்சிவசப்படத் தோன்றுகிறது. அவர்களைப் பார்க்கும்போதுதான் கவலையாக இருக்கிறது. மற்றபடி நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றார்.

அமெரிக்கா சென்றடைந்ததாக ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் விடியோவை பதிவிட்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments