முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமனவர் நடிகர் அருண் விஜய். பாண்டவர் பூமி, இயற்கை, மலை மலை, தடையற தாக்க ஆகிய படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தைப் பெற்றார். தற்போது, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கடந்த ஜன.12 ஆம் தேதி உலகளவில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிப் படமானது. வசூல் ரீதியாகவும் ரூ.30 கோடி வசூலித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படம் வருகிற பிப்.16 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாகத் தகவல்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த இப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.