ஆதித்யா நாராயண் 
செய்திகள்

ரசிகரைத் தாக்கி செல்போனை தூக்கி எறிந்த பிரபல பாடகர்!

பாடகர் உதித் நாராயண் மகனும் பாடகருமான ஆதித்யா நாராயண் ரசிகரைத் தாக்கியது அதிர்ச்சியளித்துள்ளது.

DIN

இந்திய அளவில் புகழ்பெற்ற பாடகர் உதித் நாராயண். இவர் தமிழில், ’சோனியா சோனியா’, ‘காதல் பிசாசே’, ‘எங்கேயோ பார்த்த மயக்கம்’ உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மகன் ஆதித்யா நாராயணும் பாடகராக இருக்கிறார். ஹிந்தியில் முக்கியமான பாடகராகவும் அறியப்படுகிறார்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆதித்யா நாராயணின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஷாருக்கானின் பட பாடல் ஒன்றைப் பாடியபோது ரசிகர் ஒருவர் தன் செல்போனால் ஆதித்யாவின் காலைத் தட்டி ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், இதனால் ஆத்திரமடைந்த ஆதித்யா நாராயண் தன் ஒலி வாங்கியால் ரசிகரை அடித்ததுடன் அவரின் செல்போனைப் பறித்து கூட்டத்தில் தூக்கி வீசினார். இதனைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஆதித்யாவின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, “ஆதித்யா தன் தந்தையின் பெயரையும் புகழையும் கலங்கப்படுத்துகிறார்” என்றும் “இதுவே எங்கள் கல்லூரியில் நிகழ்ந்திருந்தால் ஆதித்யா நாராயணின் மொத்த குழுவும் அடி வாங்கித்தான் சென்றிருப்பார்கள்” போன்ற பின்னூட்டங்களும் குவிந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT