முகப்பு
செய்திகள்

கோட் படத்தில் விஜயகாந்த்?

ஏஐ மூலம் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் தோற்றத்தைக் கோட் படத்தில் பயன்படுத்த உள்ளதாகத் தகவல்.

Updated On : 14 பிப்ரவரி 2024, 12:08 pm IST
பகிர்:

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்கா உள்பட பல இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

புதுச்சேரியில் இப்படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், ஏஐ மூலம் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் தோற்றத்தை கோட் படத்தில் பயன்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யும் விஜயகாந்த்தும் ஒன்றாக ஒரு காட்சியில் வருகிறார்களாம். இதற்காக, விஜயகாந்த் குடும்பத்தினரிடம் தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல் வாங்கியுள்ளதாம்.

நடிகர் விஜய், விஜயகாந்த்தின் இளவயது கதாபாத்திரமாக பல படங்களில் நடித்தவர். விஜயகாந்த் மறைந்தபோது அவரது உடலுக்கு நேரில் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். இருவருக்கும் இடையே இருந்த நல்ல பிணைப்பை அடையாளப்படுத்தும் விதமாக கோட் படத்தில் ஒரு காட்சியை உருவாக்க வெங்கட் பிரபு முடிவு செய்திருக்கிறாராம்.

ஏஐ ‘டீப் பேக்’ தொழில்நுட்பத்தின் மூலம் அசலாகவே ஒருவரின் தோற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments