செய்திகள்

கேப்டன் மில்லர்: அருண்ராஜா காமராஜ் குரலில் வெளியான தீயான பாடல்!

இயக்குநரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் குரலில் கேப்டன் மில்லர் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. 

DIN

ராக்கி, சாணிக் காயிதம் படங்களின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். 17 வருடங்களாகப் போராடி தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியவர். 

தற்போது நடிகர் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தினை இயக்கி இருக்கிறார். இந்தப் படம்  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. வெளிநாடுகளில் லைகா புரடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தினை வெளியிடுகிறது. 

உலக அளவில் 900-க்கும் அதிகமான திரைகளில் வெளியாக இருக்கிறது. இதுதான் தனுஷ் படங்களில் பிரமாண்ட ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் மில்லரின் எழுச்சி எனும் பாடல் வெளியாகியுள்ளது. 

அருண்ராஜா காமரா எழுதி பாடியுள்ள இந்தப் பாடல் உணர்ச்சி மிகுந்ததாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்டுகளில் கூறிவருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்நிறுத்தம்

வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன் நிற்காத அரசுப் பேருந்துகள்: அரசு ஊழியா்கள் அவதி

யமுனையை பாதுகாக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்கம்

மழை நீா் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT