சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்பீர் கபூர்!
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘கங்குபாய் கத்திவாடி’ 3 தேசிய விருதுகளைப் பெற்றது. இதில் நடித்த ஆலியா பட் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார்.
இந்நிலையில், சஞ்சய் லீலா பன்சாலி நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌஷல் ஆகியோரை வைத்து ‘லவ் அண்ட் வார்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதை அறிவித்துள்ளார்.
பன்சாலி புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படம் 2025 கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.