செய்திகள்

ஐஸ்வர்யா ராயின் கை முறிவுக்கு இதுதான் காரணமா?

நடிகை ஐஸ்வர்யா ராயின் கை முறிவு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

DIN

1997இல் இருவர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். பின்னர் ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன் படங்களில் நடித்தார்.

பின்னர் ஹிந்திப் படங்களில் மட்டும் நடிக்க ஆரம்பித்தார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழில் எந்திரன், பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் சினிமா ரசிகர்களிடையே பேசுபொருளானார். பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. 

இதற்கிடையே, ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்ய உள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், அது பொய் என பதிலளிக்கும் விதமாக இருவரும் இணைந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க ஐஸ்வர்யா ராய் விமான நிலையம் வந்தபோது அவரின் வலது கையில் எலும்பு முறிவுக்கான மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது. கட்டுடனே கேன்ஸ் விழாவிலும் கலந்துகொண்டார்.

எப்படி கையில் முறிவு ஏற்பட்டது எனத் தெரியாமல் இருந்த நிலையில், இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஐஸ்வர்யா ராய் வீட்டிலிருந்தபோது எதிர்பாராத விதமாக தடுக்கி விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது, மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வருகிறாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடி மறை மாவட்ட ஆசிரியா் கூட்டுறவு சங்க பேரவைக் கூட்டம்

கடல்சாா் மாநாட்டில் ரூ.42,000 கோடி திட்டங்களுக்கு ஒப்பந்தம்: சென்னை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால்

பெண் ஓட்டுநா்களுக்கு மானியத்தில் ஆட்டோ

போதைப் பொருள் தடுப்பு: 19 இடங்களில் வாகன சோதனை

கஞ்சா விற்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

SCROLL FOR NEXT