அதிகம் வசூலித்த முதல் மலையாளப் படம்.. மஞ்ஞுமல் பாய்ஸ் சாதனை!
மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மஞ்ஞுமல் பாய்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுடன் 500 திரைகளுக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ.175 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதால் இதுவே அதிகம் வசூலித்த முதல் மலையாளப் படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது. மேலும், ரூ.200 கோடி வசூலிக்கவுள்ள முதல் மலையாளத் திரைப்படம் என்கிற பெருமையயும் மஞ்ஞுமல் பாய்ஸ் அடையவுள்ளது.
முன்னதாக, ஜூட் ஆண்டனி ஜோசஃப் இயக்கத்தில் வெளியான 2018 திரைப்படமே மலையாளத்தில் அதிகம் வசூலித்த திரைப்படமாக இருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.