FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிவேதா பெத்துராஜ்! காரணம் என்ன?

நடிகை நிவேதா பெத்துராஜ் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விடியோ வைரலாகியுள்ளது.

Updated On : 30 மே 2024, 2:37 pm IST
பகிர்:

நடிகை நிவேதா பெத்துராஜ் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விடியோ வைரலாகியுள்ளது.

ஒருநாள் கூத்து படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பின்னர் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், சங்கத் தமிழன் படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பூ என்ற படம் ஜியோ சினிமாஸில் வெளியாகியது.

சமீபத்தில் தமிழ்நாடு ஆளுங்கட்சித் தலைவர் ஒருவர் நிவேதா பெத்துராஜுக்கு துபையில் ரூ. 50 கோடி மதிப்பில் சொகுசு பங்களா வாங்கிக் கொடுத்ததாக கடந்த சில நாள்களாக யூடியூப் சேனல்களில் செய்திகள் பரவின. பின்னர் இது குறித்து நிவேதா பெத்துராஜ் விளக்கமளித்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஹைதராபாத்தில் நிவேதா பெத்துராஜ் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் விடியோ இணையத்தில் வைரலானது. காரின் பின்பக்கத்தை திறக்கும்படி காவல்துறையினர் கேட்கும்போது மறுப்பு தெரிவிக்கிறார். விடியோ எடுக்கும் நபரையும் தடுத்து விடுவார். இந்த விடியோ இணையத்தில் வைரலானது.

ரசிகர்கள் இது ஏதோ படத்தின் புரமோஷனாக இருக்குமென கமெண்டுகளில் கூறி வருகிறார்கள். தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி படத்தின் தெலுங்கு ரீமெக்கில் நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் புரமோஷன் விடியோவாகத்தான் இது இருக்குமென ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments