சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார். இப்படத்திற்குப் பின் தன் சம்பளத்தையும் ரூ. 60 கோடி வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
அமரன் படத்தை முடித்தபின் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் படமொன்றில் நடித்து வருகிறார். எஸ்கே - 23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் அடுத்த பாடல் அறிவிப்பு!
இதைத் தொடர்ந்து, இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது நடிகர் சூர்யா நடிக்க வேண்டிய கதையாம். இப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் - சுதா கொங்காரா படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வாவும் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் படத்தில் ஜெயம் ரவி இணைந்திருக்கும் தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.